ஐபிஎல் போட்டியை நடத்துவதற்காக டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்குமாறு ஐசிசிக்கு அறிவுறுத்தவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

image

உலகக் கோப்பை தொடர் தொடங்க பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதா? அல்லது ஒத்தி வைப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என உலகக்கோப்பையின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்திருந்தார். இதனிடையே இருபது ஓவர் உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டால், அந்தக் காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

image

இந்நிலையில் உலகக் கோப்பை நிலை குறித்து மார்ச் 28 ஆம் தேதி தெரிய வரும் என்றும் எப்படியும் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் “‘டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ஐசிசிக்கு ஏன் பிசிசிஐ ஆலோசனை வழங்க வேண்டும். ஐபிஎல் போட்டியை நடத்துவதற்காக ஒருபோதும் இத்தகைய முயற்சியில் பிசிசிஐ ஈடுபடாது. ஆஸ்திரேலியா அரசாங்கம் டி20 உலகக் கோப்பையை நடத்தலாம் என முடிவெடுத்தால் திட்டமிட்டபடி நடைபெறும். அது தொடர்பாக பிசிசிஐ எவ்விதமான ஆலோசனையும் வழங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.