மழைக்காலம் முடிந்த பிறகே இந்தியா கிரிக்கெட் விளையாட்டைத் தொடங்கும் என பிசிசிஐயின் சிஇஓ ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டு ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கூட்டத்தில் பேசிய ராகுல் ஜோரி, “நாங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்தையும் செய்து வருகிறோம். அதன்படி, மழைக்காலம் முடிந்த பின்னரே இந்தியா கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க முடியும். ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரையில் உலகின் அனைத்து சிறந்த வீரர்களும் பங்கேற்பார்கள். அப்படி நடந்தால் தான் ஐபிஎல் நன்றாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நாளையே நிலைமை சரியாகிவிடாது” என்றார்.

image

அத்துடன், “வெளிநாட்டு வீரர்களை அழைப்பதற்கு அரசிடம் அறிவுரைகள் பெற வேண்டும். தற்போது வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போது விமானங்கள் இயக்கப்பட்டாலும், அப்போது வீரர்கள் விளையாடுவதற்கு முன்பாக தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திருவள்ளூரில் இன்று 42 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.