தெறி இந்தி ரீமேக் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் அட்லீ. இவர் நடிகர் விஜயை வைத்து அடுத்தடுத்து இயக்கிய ‘தெறி’, ‘பிகில்’ ஆகிய இரண்டு படங்களும் ப்ளாக் பாஸ்டர் வெற்றியை பெற்றன. அதனையடுத்து அட்லி, பாலிவுட் பக்கம் போகப் போகிறார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே ஒலிக்கத் தொடங்கியது. குறிப்பாக இவர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் கசிந்தது.
 
image
 
மேலும் இவர், விஜயை வைத்தே மற்றொரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்தது. அதனையொட்டி ட்விட்டரில் ‘பிகில்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்படி ரசிகர்கள் ஒருவர் வைத்த வேண்டுகோளை, அட்லீ ஆமோதித்திருந்தார். ஆகவே அவர் மீண்டும் விஜயுடந்தான் இணைவார் என செய்தி பரவியது.  
 
 
இந்நிலையில் இப்போது,  அட்லீ குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் வருண் தவானின் புதிய படம் ஒன்றை அட்லீ இயக்க உள்ளதாகவும் அதன் மூலமே அவர் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. மேலும் அதற்கான பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக இந்தப் படம் இவரது ‘தெறி’யின்  இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  
 
image
 
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் சமீபத்தில்  ‘ஸ்ட்ரீட் டான்சர் 3 டி’ படம் வெளியானது. அதில் ஷ்ரத்தா கபூர் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருடன் நடித்திருந்தார். இதனை ரெமோ டி’சோசா இயக்கி இருந்தார்.  இப்போது, விஜய் நடித்த பிளாக் பஸ்டர்  திரைப்படமான ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கான விவாதத்தில் இந்த நடிகர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அட்லீ தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
 
நடிகர் விஜய் நடிப்பில்  2016 ஆம் ஆண்டு வெளியான ‘தெறி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய குமார் என்ற வேடத்தில் அவர் நடித்திருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலைப் பெற்றது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.