ஊரடங்கு உத்தரவு காலத்தில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பகுதி அங்கன்வாடி பணியாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பெண்கள் அதிக அளவு குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பெண்களுக்கு ஏற்படும் குறைகளை களையும் பொருட்டு அங்கன்வடி பணியாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாக தற்காலிகமாக செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைக் காலத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பான புகார்களை தங்கள் பகுதிகுட்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களின் கைபேசி எண்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.