ஜியோ நிறுவனத்தில் ரூ.43,500 கோடியை ஃபேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது

சமூக வலைதளங்களின் ராஜாவாக பார்க்கப்படுகிறது ஃபேஸ்புக் . இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் ஃபேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமானது ஆகும். இந்தியாவில் பல கோடி மக்கள் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

image

அதேபோல் இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோவும் உள்ளது. மிகக்குறைந்த விலையில் இண்டர்னெட் சேவை வழங்கியதன் மூலம் அதிக மக்களை சென்றடைந்தது ஜியோ. தற்போது இந்த இரு பெரிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

image

முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்சின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் ரூ43,574 கோடிஅளவுக்கு முதலீடு செய்துள்ளது.

இதனால் தங்கள் நிறுவனத்தி்ன் மதிப்பு ரூ.4.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ஜியோ தெரிவித்துள்ளது. இரு பெரும் நிறுவனங்கள் இணைந்துள்ளதால் எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனாவின் மோசமான விளைவுகளை இனிதான் உலகம் சந்திக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.