அமெரிக்கர் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, 14 நாட்கள் கேரளவாசி ஒருவர் தனது இல்லத்தை கொடுத்த செயல் அனைவரின் பாரட்டைப் பெற்றுள்ளது.
குழப்பும் கொரோனா: நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது?
கேரள மாநிலம் கொச்சி அனைவராலும் விரும்பப்படுகின்ற சுற்றுலா தலங்களுள் ஒன்று. ஆண்டுதோறும் இங்கு வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் வெளிநாட்டினர் ஏராளமானோர் வருகை தந்தனர். அதில் ஒருவர்தான் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா சான்செஸ் (50). கேரளாவில் கொரோனா தொற்று பரவியதையடுத்து அங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் ஏஞ்சலா சான்செஸையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனையடுத்து சான்செஸ் கேரளாவில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு யாரும் இடம் தர முன்வர வில்லை. இதனையடுத்து கேரளாவில் வசிக்கும் ஜான் என்பவர், அதிகாரிகளின் அனுமதியோடு சான்செஸிற்கு இடம் தர முன் வந்துள்ளார்.
சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா?
அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட சான்செஸை, ஒரு நாள் கூட ஜான் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அந்த 14 நாட்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய ஜான் அவர் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கியுள்ளார். இதனையடுத்து தனிமைகாலம் முடிந்து தனி விமானம் மூலம் சான்செஸ் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
இது குறித்து ஏஞ்சலா சான்செஸ் கூறும் போது “ எனக்கு கொச்சியை விட்டு செல்ல மனமே இல்லை. ஏனெனில் இந்த இடம் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் எனது தாயும் மகனும் இருப்பதால் நான் அங்கு செல்ல வேண்டும். எனது அன்புக்குரியவர்களுடன் அடுத்த வருடமும் நான் இங்கு வருவேன்” என தெரிவித்துள்ளார்.