கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிதாக 1,111 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார். ஏற்கனவே மே 4 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
As of 21 Apr 2020, 12pm, we have preliminarily confirmed an additional 1,111 cases of COVID-19 infection in Singapore. Read more: https://t.co/3D6hI7H0ql
— Ministry of Health (@sporeMOH) April 21, 2020
உலக நிலவரம்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 24,96,660
கொரோனாவால் உயிரிழந்தோர் : 1,71,240
குணமடைந்தோர் எண்ணிக்கை : 6,55,888