பிரிட்டனில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறையும் வரை முழுமுடக்கத்தை தளர்த்தும் எண்ணம் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் மாபெரும் சுகாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் பிரட்டனில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் அந்நாடு 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறையும் வரை முழுமுடக்கம் இருக்கும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சீனாவிற்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தங்களுக்கே அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், பயன்படுத்தியதை இரண்டாம் முறை உபயோகிக்க அறிவுறுத்தப்படுவதாகவும் பிரிட்டன் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.