திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜா கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி புஷ்பா (39). இந்தத் தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் நடந்துவிட்டது.

Also Read: `மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!’ -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

கொலை செய்யப்பட்ட புஷ்பா

புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த ரமேஷ் மனைவி புஷ்பாவைக் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் புஷ்பா கோபித்துக்கொண்டு வெங்கல் அருகே ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர், புஷ்பா சமரசமடைந்து கடந்த 13-ம் தேதி கணவர் வீட்டுக்கு வந்தார். ஊரடங்கு என்பதால் தன் ஆண் நண்பரான தொழிலாளியிடம் புஷ்பாவால் பேச முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வீட்டில் புஷ்பாவைச் சந்தித்த அவரின் ஆண் நண்பர், நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்குவந்த ரமேஷ், இருவரையும் கண்டித்துள்ளார்.

ரமேஷ்

Also Read: ஊரடங்கு முடிந்த பிறகுதான் வாகனங்கள் தரப்படும்… தமிழக டிஜிபி அலுவலகம் புதிய முடிவு!

ரமேஷைப் பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். புஷ்பா, தூங்கியுள்ளார். ஆனால் ரமேஷுக்கு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த புஷ்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார் ரமேஷ். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்குப் போராடியுள்ளார். ஆனால், ஆத்திரம் தீரும்வரை புஷ்பாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே புஷ்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் விடியும் வரை ரமேஷ் வீட்டிலேயே இருந்தார். விடிந்ததும் கவரைப்பேட்டை காவல் நிலையத்துக்கு கத்தியோடு சென்றார். ரத்தக்கறை படிந்த கத்தியைப் பார்த்ததும் போலீஸார் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், மனைவியைக் கொலை செய்த தகவலைக் கூறினார். அதனால் அவரைக் கைது செய்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

கொலை

புஷ்பாவின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவத்தன்று இரவு குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் ரமேஷ். வீட்டில் கணவனும் மனைவியும் மட்டுமே இருந்துள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ரமேஷ், மனைவியைக் கொலை செய்துள்ளார்” என்றனர்.

ஊரடங்கு சமயத்தில் மனைவியைக் கணவர் கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.