12,000-ஐ கடந்த எண்ணிக்கை!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை இந்தியாவில் 12,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,477 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,489 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 414 பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது