(கோப்பு புகைப்படம்)

தென்கொரியாவில் குணமடைந்தவர்களில் 116 பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கொரோனா வைரஸிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கும் நிலையில், அவர்களில் சிலருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்த 116 பேரை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Coronavirus live updates: Staff worker at Disneyland Paris tests ...

வெளித்தொடர்பு ஏதும் இல்லை: கோவையில் 5 வயது குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?

இதுகுறித்து ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், கொரோனாவில் இருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணமடையாமல் இருந்திருக்கலாம் என்றும், அதனால் அவர்களது உடலில் மீண்டும் வைரஸ் செயல்பட தொடங்கியிருக்கும் எனவும் விளக்கமளிக்கின்றனர். வைரஸ்களின் எச்சம் நோயாளிகளின் உடம்பில் இருந்து வெளியேறாமல் உள்ளேயே இருந்ததால், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.