துருக்கியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது தாயை ஒரு மாத இடைவெளிக்குப் பின் கண்ட மகள் கதறி அழுது கட்டியணைத்துக் கொண்ட நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

image

“உதவி செய்வதை தடுப்பது அரசின் நோக்கம் அல்ல” – தமிழக அரசு விளக்கம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் பாலி கிளினிக் ஒன்றில் ஓஸ்ஜி கொகேக் என்பவர் மருத்துவ செயலராக பணியாற்றி வருகிறார். துருக்கியில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இவர் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் பாதுகாப்பு கருதி தனது 6 வயது மகள் ஓய்கு-வை அவரது பாட்டி வீட்டில் ஒப்படைத்திருந்தார்.

image 

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ விதித்த தடைக்கு எதிர்ப்பு – திமுக முறையீடு

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தன் மகளுடன் நேரத்தை செலவிட முடிவு செய்த ஓஸ்ஜி, தன் மகளுக்கு நேரில் இன்‌ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தார். இதனையடுத்து ஓய்கு சைக்கிள் ஓட்டிகொண்டிருந்த போது அவள் இருந்த பகுதிக்கு சென்ற கொகேக் தனது மகளை கட்டி அணைக்க கைகளை விரித்தார். தாயை பார்த்த உடனே, செய்வதறியாமல் நின்ற ஓய்கு, சைக்கிளை சாலையோரம் நிற்க வைத்து விட்டு, கோபத்துடன் கைகளை கட்டிக் கொண்டு ஓஸ்ஜிக்கு அருகில் சென்றார். தாயின் அருகில் சென்றவுடன் பிரிவின் வலி ஓய்கு-வை பீடிக்க குமுறி அழத் தொடங்கினாள் ஓய்கு. காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவர்களது பாசப்பிணைப்பை உணர்த்தும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இது குறித்து  ஓஸ்ஜி கொகேக்  கூறுகையில்  “ என்னால் இந்த உணர்வுகளை விளக்க முடியவில்லை. பல முறை தொலைபேசி வாயிலாக அவளிடம்  பேச முயற்சித்தபோது அவள் என்னிடம் பேசவில்லை. இந்த இடைவெளி நிச்சயம் வலி நிறைந்ததாக இருந்தது” என்றார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.