திருச்சியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தினர் 39 பேர் பிற மாவட்டத்தினர் 3 பேர் என மொத்தம் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார். மேலும், முகக் கவசத்தை வீசியுள்ளார்.

 image

(கோப்பு புகைப்படம்)

அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நண்பரைக் காண தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் சென்ற நபர் : கைது செய்த போலீசார்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.