பிரான்ஸின் விமானம் தாங்கி போர்க் கப்பலில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்ஸில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சார்ல்ஸ் டி கல்லா போர்க் கப்பலில் சுமார் 1800 பேர் பணியில் உள்ளனர். கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து மருத்துவக் குழு ஒன்று போர்க் கப்பலுக்கு சென்று அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியது.
இதில் 50 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மற்றவர்களை சோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக வழங்கிய சானிடைசரை குடிபோதைக்காக குடித்த நபர் உயிரிழப்பு