இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

இந்த சந்திப்பில் பல மாநில முதலமைச்சர்கள், அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கை ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் ஊரடங்கில் சில விலக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் சில கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

image

இது குறித்து வெளியான தகவலின் படி, கொரோனாவை விரைவாக கண்டறியும் “ரேபிட் டெஸ்ட்” கருவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு ஆபத்துகால காப்பீடு வேண்டும், தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் மற்றும் தொழில்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும், மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.” போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமரிடம் மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.