தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 4 நாள்களில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.