இந்தியாவில் ஒரேநாளில் 540 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 166 பேர் இறந்துள்ளனர். 473 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, உலகளவில் கொரோனா உயிரிழப்பில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,792 ஆக இருந்த நிலையில் அமெரிக்காவில் 14,795 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் தொடரும் மரணங்கள்!

கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு 17,669 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 542 பேர் பலியாகியுள்ளனர். 1,39,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இத்தாலி கொரோனா உயிரிழப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.