அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
மருந்துகளை தயாரிக்க பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனிடையே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பாவிடில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்
I spoke to him (PM Modi), Sunday morning & I said we appreciate it that you are allowing our supply (of Hydroxychloroquine) to come out, if he doesn’t allow it to come out, that would be okay, but of course, there may be retaliation, why wouldn’t there be?: US Pres Donald Trump pic.twitter.com/kntAqATp4J
— ANI (@ANI) April 6, 2020
நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன். மருந்தை அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்திருந்தார்.
தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா
இந்நிலையில், மருந்துகளை தயாரிக்க பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கியுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM