பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

modi video message: நாளைக்கு ஒரு செய்தி ...

பிரதமரின் இந்த பேச்சினை அடுத்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் கடந்த சில தினங்களாக முன் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் டார்ச் லைட்டுகளை ஏற்றி வருகின்றனர்.

அதன்படி, அமித்ஷா தனது வீட்டில் விளக்கை ஏற்றினார்.

image

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது குடும்பத்துடன் அகல் விளக்கை ஏற்றினார்.

image

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குடும்பத்தினருடன் அகல் விளக்கு ஏற்றினார்.

image

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடும்பத்துடன் விளக்கை ஏற்றினர்.

image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விளக்கை ஏற்றினார். 

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.