கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு திரும்ப விருப்பமாக இருக்கிறது என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாவலை கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊருக்கு திரும்ப விருப்பப்படுவதாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
”படப்பிடிப்பு கடந்த 24-ம் தேதி கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது. பிறகு நாங்கள் பாதுகாப்பாக படப்பிடிப்பு நடத்துவதை உறுதி செய்த அதிகாரிகள் படப்பிடிப்பை தொடர அனுமதி அளித்தார்.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால் 27ம் தேதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் நாங்கள் பாலைவனத்தில் உள்ள முகாமிலேயே தங்கி உள்ளோம். படப்பிடிப்புக்காக உணவு, தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#Aadujeevitham pic.twitter.com/hwX4MFmQwJ
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 1, 2020
எங்கள் குழுவில் உள்ள ஒரு மருத்துவரும், ஜோர்டான் அரசால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரும் எங்களை சோதனை செய்கின்றனர். உடனடியாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்க சாத்தியமில்லை. கிடைக்கும் வாய்ப்பில் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.