டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

புதுச்சேரியில்  1 முதல்  9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி 

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டில்
புதுச்சேரியைச் சேர்ந்த மூவர், காரைக்காலைச் சேர்ந்த இருவர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்த 6 பேர் பங்கேற்றிருப்பது தெரிய
வந்துள்ளது.

image

அதில் புதுச்சேரியைச் சேர்ந்த இரு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் மூல‌ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய நால்வரும்
தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை –  நாராயணசாமி 

ஏற்கெனவே இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மாஹேவைச் சேர்ந்த 65வயது மூதாட்டி, சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.