கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோய் என்பதால் கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளி வேண்டும், சமூக விலகல் வேண்டுமென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

image

ஹரியானாவில் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை கவனித்து வந்த செவிலியருக்கும் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணத்தை ஆராய்ந்த போது நோயாளியின் செல்போனை செவிலியர் பயன்படுத்தியதால் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள தலைமை மருத்துவர்., மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முறையான உடை, கையுறை என கொரோனா தொற்று ஏற்படாதவாறே நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் அவருக்கு அப்படி ஏதும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் இது ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

image

கொரோனா வைரஸ் செல்போன்கள் மூலமாகவும் பரவும் என்பதால் கிருமி நாசினியைக் கொண்டு செல்போனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 ‘Work From Home’ – அதிக வேலைப்பளுவால் நொந்து போகும் ஊழியர்கள்!!

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.