திருப்பூரில் காலையில் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கிருமிநாசினி சுரங்கப்பாதைக்குள் நுழைந்த பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 1657 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்குவதற்கான நேரம் காலை தொடங்கி மாலை வரை இருந்தது.
இதனிடையே கொரோனா தொற்று தீவிரமானதையடுத்து, இந்த நேரமானது மதியம் 2.30 வரை குறைக்கப்பட்டது. இதனால் முன்பை விட தற்போது காலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில், அதிக மக்கள் கூடுவதால் கொரோனா தொற்றும் அபாயம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈஷா யோகா வலியுறுத்தல்
இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக திருப்பூரில் காலையில் சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் சந்தையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொது மக்கள், கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் 3 முதல் 5 நொடிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டு, அதன் பின் கைகழிவிய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கபடுகின்றனர். திருப்பூரில் கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
We have set up a first of it’s kind #disinfection tunnel in Thennampalayam market in #Tiruppur where people will have to walk through the disinfection tunnel for 3-5secs after handwash,before entering the market ! Thanks to #YI #CII #TiruppurCoronaFighters for support ! pic.twitter.com/D0hWWqjBnl
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 1, 2020