மதுரையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது தொடர்புடைய 3 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை நரிமேடு, தபால்தந்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவும், உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் சுகாதாரதுறை மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. வரும் 4 நாட்களுக்கு இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற தடை விதிக்கப்பட்டது.
மேலும், மருந்துகடைகளை தவிர அனைத்து கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா அறுகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வீடுகளுக்கு சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெர்சியை ஏலம் விட்டு நிதி திரட்டும் கிரிக்கெட் வீரர் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM