சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் – மத்திய அரசு அனுமதி
சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 195 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 206 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது….