கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்காக தன்னுடைய தலைமுடியை ஷேவ் செய்து மொட்டை அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளை கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் அயராது போராடி வருகிறார்கள். மருத்துவப் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒன்று செய்து வருகிறார்கள். இந்தியாவில் கூட பிரதமர் மோடி கைதட்டச் சொன்னதை பலரும் மறக்காமல் செய்தார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வித்தியாசமாக ஒன்றினை செய்துள்ளார். அவர் தன்னுடைய தலைமுடியை மருத்துவர்களுக்காக மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், டிரிம்பர் மெஷின் மூலம் தன்னுடைய தலைமுடி அத்தனையும் ஷேவ் செய்கிறார். கஜினி சூர்யா போல் மொட்டை அடித்துக் கொண்டார்.
அத்துடன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பலரையும் இதேபோல் செய்ய முடியுமா என்ற தொணியின் டேக் செய்துள்ளார். வார்னரின் வேண்டுகோளை ஏற்று பலரும் வீடியோ வெளியிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள் – துயரத்தில் விவசாயிகள்