தமிழகத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நேற்று வரை எண்ணிக்கை 67 ஆக இருந்தது. கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்புள்ள 57 பேரில் 50 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அவர் கூறினார்.

மேலும், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர்; 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டு சென்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளவும்” என்று தெரிவித்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.