ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் தற்பபோது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யோகா செய்யும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார் பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவிற்காக தன்னை மன்னித்து விடும்படியும் இதனை தவிர வேறு வழியில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.