டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றதாக வெளியாக தகவல் பொய் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ‘டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஜமாத்தினர் பங்கேற்றனர் என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் யாரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை, அதில் துளியளவும் உண்மை இல்லை. அசாதாரண சூழலில் பரபரப்புக்காக செய்தி வெளியிடாமல் செய்தியின் உண்மை தன்மை அறிந்து வெளியிடுவதே ஊடக தர்மம் ஆகும்.

‘வீட்டுச் சிறையில் தொழிலாளர்கள்.. இதயம் நொறுங்கும் வீடியோ’: பிரசாந்த் கிஷோர் ட்வீட்

தமிழக மக்களின் நலனில் ஜாதி, மத பேதம் இல்லாமல் பல்வேறு பேரிடர் காலங்களில் ஜமாத் சிறப்பாக பணியாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள்.எனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குறித்தான செய்திகள் வெளியிடும் போது உண்மை தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

முன்னதாக, வெளியான தகவலில் புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 1500 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.