பிரதமர் மோடி தான் யோகா செய்யும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் தங்கள் பொழுதை கழிக்க ஏதுவாக ராமாயணம் நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தான் யோகா செய்யும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது, நேயர் ஒருவர் தனது ஃபிட்னஸ் குறித்த காரணத்தை கேட்டதாக தெரிவித்துள்ளார். எனேவ இந்த யோகா வீடியோக்களை பகிர்வதன் மூலம் நீங்களும் யோகா பயிற்சி மேற்கொள்வீர்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யோகா செய்வதன் மூலம் நன்மை கிடைப்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் யோகா செய்யும் வீடியோக்கள் பல மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.