ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்த நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

image

சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர் இறந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 10,023 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

image

ஸ்பெயினில் 73,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 5,982 பேர் உயிரிழந்துள்ளனர். 12,285 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தகவலை தமிழில் வெளியிட்ட விக்கிப்பீடியா
.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.