144 தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற்பட்டோரை, தண்டால் எடுக்க சொல்லி வினோத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி சிலர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிகின்றனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியதும், அறிவுரை வழங்கியும் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில், சிலர் அவசியமில்லாமால் சாலையில் சுற்றித்திரிந்ததாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அவர்களை கண்காணிக்க பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து இவர்கள் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனாவை விரட்ட தூய்மை பணியில் ஈடுபட்ட நடிகர் விமல்
பிரிட்டனில் 6 மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு ?
அவர்களை தனி வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். இது மட்டுமல்லாமல் அவர்களை தண்டால், குதித்து தாண்டுதல், தவளை ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்ய வைத்தும், விழிப்புணர்வு குறித்த கதையையும் கூறி கொரோனா உறுதி மொழி எடுக்கவைத்தும் டி.எஸ்.பி.,பழனிச்சாமி வினோதமான தண்டனை வழங்கினார். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர்,அனுப்பி வைக்கப்பட்டனர்.