கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தெரியும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தனித்திருத்தல் மட்டுமே இதற்கு மிகப்பெரிய தீர்வு என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதற்கேற்ப ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஊடரங்கு நிலவும்போது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற இந்த நோயை எதிர்த்துப் போராட அவர்கள் செய்யக்கூடியது இது மட்டும்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நீங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும். எனவே, வீட்டிலேயே இருங்கள். உயிருக்கு ஆபத்தான இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் அதிகாரிகளுக்கு உதவுமாறும்” கபில்தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர், “இது ஒரு நேர்மறையான வழி. ஊரடங்கு அல்லது வீட்டில் தங்குவது மட்டுமே வழி. இந்தச் சூழ்நிலையை ஏற்க உங்களுக்குள் நீங்களே சவாலை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிற்குள் உலகம் இருக்கிறது. ,உங்கள் குடும்பத்தினர், புத்தகங்கள், டிவி, இசை என உங்களை மகிழ்விப்பதற்கான வழிமுறைகள் நிறைய உள்ளன. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு சிறப்பானது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்று ” என்றும் அவர் கூறியுள்ளார்.